NEWS :
TRBNEWS Welcomes You

19 October 2012

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு: விரைவில் கடிதம் அனுப்பப்படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படுகிறது. இதுபற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு 152 உதவி பேராசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 139 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தபட்டியல் தொழில்நுட்ப கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.