ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப்
பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்தப் புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழக்கத்தைவிட கூடுதலாக நேரம் ஆகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
6 லட்சம் பேர்: தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். எந்தவொரு
பிரச்னையும் இன்றி இந்தத் தேர்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்ததாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வின் அடிப்படையில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி
ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2,448
பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு
மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை
நடத்தப்பட்டது.
காலையில் நடைபெற்ற முதல் தாளை 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர்.
பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் தாளை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர்.
சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.
தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பெரும்பாலான தேர்வர்கள் மகிழ்ச்சி
தெரிவித்தனர். முதல் தாளில் ஆங்கிலமும், இரண்டாம் தாளில் தமிழும் சற்று
கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
3 வாரங்களுக்குப் பிறகு விடைகள் வெளியீடு: தமிழகம் முழுவதிலுமிருந்து
சென்னைக்கு இந்த விடைத் தாள்கள் அனைத்தும் கொண்டுவரப்படும். அதன் பிறகு
மூன்று வாரங்கள் இந்த விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெறும்.
விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கேள்விகளுக்கு உரிய சரியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.