ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நவம்பர் 6 ஆம் தேதி
(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
மொத்தம் 6.56 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே
தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 10,397 பேரும், இரண்டாம் தாளில் 8,849
பேரும் வெற்றி பெற்றனர்.
நவம்பர் 6, 7 ஆம் தேதிகளில் இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நவம்பர் 8, 9 தேதிகளில் முதல் தாளில்
வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் பதிவு மூப்பின்
அடிப்படையிலும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்
அடிப்படையிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பை
கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில 17 அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.