கோவை:ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி) மாற்றுத் திறனாளிகளுக்கு, சலுகை
மதிப்பெண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பட்டப்படிப்புடன் பி.எட்., அல்லது பிளஸ் 2 முடித்தவுடன் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தால், ஆசிரியர் ஆகி விடலாம்
என்ற நிலை கடந்த காலத்தில் இருந்தது. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில்,
90 மதிப்பெண்கள் பெறுபவருக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்ற நிலை உள்ளது. பொதுமக்கள்
மத்தியில் இந்த ஆரோக்கியமான நடைமுறை பரவலான வரவேற்பு பெற்றாலும்,
போராட்டமே வாழ்க்கையாகி விட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஆசிரியர்
தகுதி தேர்வு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழ்மையான பின்னணியில்
படித்து, வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடையும் நோக்கத்துடன் படிக்கும்
மாற்றுத்திறனாளிகள் பலர், டெட் தேர்வில் வெற்றி பெற முடியாமல்
திணறுகின்றனர்.சிரமப்பட்டு படித்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாத
மாற்றுத் திறனாளிகளில், திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த
சரவஸ்வதியும் ஒருவர். இரண்டு வயதில் போலியோ தாக்கியதில் கால்களின்
இயக்கத்தை இழந்த இவருக்கு தந்தை கிடையாது. தவழ்ந்தவாறு வீட்டின்
அறைகளுக்குள் வலம் வந்த இவருக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூன்று சக்கர
சைக்கிள் வழங்கியது.உடன் படித்த மாணவியரின் உதவியால் பள்ளி மற்றும் கல்லூரி
படிப்பை சிரமப்பட்டு முடித்தார். 2009ல் பி.எட்., படிப்பை முடித்துள்ள
இவருக்கு, டெட் தேர்வு பெரும் சவால் ஆக அமைந்துள்ளது. இதுகுறித்து சரஸ்வதி
கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்ற
புதிய நிபந்தனையால், எனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 12.7.2012ல்
நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 65 மதிப்பெண்ணும், 14.10.2012ல்
நடைபெற்ற மறு தேர்வில் 80 மதிப்பெண்ணும் (கீ ஆன்சர் ஒப்பீடு) மட்டுமே பெற
முடிந்தது.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களும், என்னைப் போன்ற
மாற்றுத் திறனாளிகளும் ஒரே மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவில் சிறிதும்
நியாயமில்லை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சரஸ்வதி
கூறினார்.கோவை மாவட்ட கை, கால் ஊனமுற்றோர் உரிமைக்கான சங்கத்தின் தலைவர்
நாகப்பன் சூர்யா கூறுகையில், ஆரோக்கியமானவர்களுடன் எங்களை போட்டி போட
வைப்பது எப்படி சரியாகும்? கை, கால் இழந்தவர்களுக்குதான் போராட்டத்தின் வலி
புரியும். ஆசிரியர் தகுதி தேர்வில் தனி ஒதுக்கீடு, சலுகை வேண்டும்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பிறரை விட அதிக மதிப்பெண் பெற்றால் அவரை
மெரிட் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.