வருடம், கிழமையில் தவறு ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குழப்பம்
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேர்வு நாள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். தேர்வில் 2700 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். புதுச் சேரியில் ஒரு பட்ட தாரி கூட தேர்ச்சி பெற வில்லை. தோல்வி அடைந் தவர்களுக்கு மீண்டும் அக் டோபர் 3ம் தேதி தேர்வு நடக்கும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போக இப்போது 6 லட் சத்து 55 ஆயிரத்து 350 பேர் தமிழகத்திலும், 8787 பேர் புதுச்சேரி யிலும் தேர்வு எழுத உள்ளனர். இவர் களுக்கு புதிய பதிவு எண்கள் மற்றும் தேர்வு மையம் ஆகியவற்றை தேர்வு வாரியம் ஒதுக்கி யுள்ளது. இது குறித்த விவரங்களை நேற்று இணைய தளத்தில் தேர்வு வாரியம் வெளி யிட்டது. ஆனால் தேர்வு நடக்கும் நாளை அக்டோ பர் 3, 2013, வியாழக் கிழமை என்று குறிப்பிட் டுள்ளனர். ஆனால் அடுத்த மாதம் தேர்வு நடக்க உள்ள தேதி அக் டோபர் 3, 2012 புதன் கிழமை.
இதையடுத்து, நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்துக்கு சென்றனர். அதற்கு பிறகு இணைய தளத்தை பார்த்த அதிகாரிகள் அவசரம் அவசரமாக தவறுகளை திருத்தினர். அதில் 2013 என்பதை 2012 என்று திருத்தினர். ஆனால் கிழமையை திருத்தவில்லை. அதற்கு பிறகும், கிழமை தவறாக உள்ளது குறித்து சிலர் புகார் தெரிவித்தனர். பின்னர் அதை திருத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இடைநிலை பட்டதாரி கள் தொடர்ந்த வழக்கில், தகுதி தேர்வில் போதிய சதவீதம் தேர்ச்சி இல்லை என்றால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப் பட்டுள்ளபடி மத்திய அரசிடம் விதி தளர்வு கேட்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்து விட்டது. அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கருத் தில் எடுத்துக் கொள்ளா மல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.
இதையடுத்து, நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரி யத்துக்கு சென்றனர். அதற்கு பிறகு இணைய தளத்தை பார்த்த அதிகாரிகள் அவசரம் அவசரமாக தவறுகளை திருத்தினர். அதில் 2013 என்பதை 2012 என்று திருத்தினர். ஆனால் கிழமையை திருத்தவில்லை. அதற்கு பிறகும், கிழமை தவறாக உள்ளது குறித்து சிலர் புகார் தெரிவித்தனர். பின்னர் அதை திருத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இடைநிலை பட்டதாரி கள் தொடர்ந்த வழக்கில், தகுதி தேர்வில் போதிய சதவீதம் தேர்ச்சி இல்லை என்றால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப் பட்டுள்ளபடி மத்திய அரசிடம் விதி தளர்வு கேட்கலாம் என்று நீதி மன்றம் தெரிவித்து விட்டது. அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கருத் தில் எடுத்துக் கொள்ளா மல் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு tntrbnews@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.